|
AND
find keywords in
Home Page
Genesis ஆதியாகமம் Exodus யாத்திராகமம் Leviticus லேவியராகமம் Numbers எண்ணாகமம் Deuteronomy உபாகமம் Joshua யோசுவா Judges நியாயாதிபதிகள் Ruth ரூத் 1 Samuel 1 சாமுவேல் 2 Samuel 2 சாமுவேல் 1 Kings 1 இராஜாக்கள் 2 Kings 2 இராஜாக்கள் 1 Chronicles 1 நாளாகமம் 2 Chronicles 2 நாளாகமம் Ezra எஸ்றா Nehemiah நெகேமியா Esther எஸ்தர் Job யோபு Psalms சங்கீதம் Proverbs நீதிமொழிகள் Ecclesiastes பிரசங்கி Song of Solomon உன்னதப்பாட்டு Isaiah ஏசாயா Jeremiah எரேமியா Lamentations புலம்பல் Ezekiel எசேக்கியேல் Daniel தானியேல் Hosea ஓசியா Joel யோவேல் Amos ஆமோஸ் Obadiah ஒபதியா Jonah யோனா Micah மீகா Nahum நாகூம் Habakkuk ஆபகூக் Zephaniah செப்பனியா Haggai ஆகாய் Zechariah சகரியா Malachi மல்கியா Matthew மத்தேயு Mark மாற்கு Luke லூக்கா John யோவான் Acts அப்போஸ்தலருடைய நடபடிகள் Romans ரோமர் 1 Corinthians 1 கொரிந்தியர் 2 Corinthians 2 கொரிந்தியர் Galatians கலாத்தியர் Ephesians எபேசியர் Philippians பிலிப்பியர் Colossians கொலோசெயர் 1 Thessalonians 1 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 2 தெசலோனிக்கேயர் 1 Timothy 1 தீமோத்தேயு 2 Timothy 2 தீமோத்தேயு Titus தீத்து Philemon பிலேமோன் Hebrews எபிரெயர் James யாக்கோபு 1 Peter 1 பேதுரு 2 Peter 2 பேதுரு 1 John 1 யோவான் 2 John 2 யோவான் 3 John 3 யோவான் Jude யூதா Revelation வெளிப்படுத்தின விசேஷம்
|
|
|
யோபு Chapter18 1 அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக: 2 நீங்கள் எந்தமட்டும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும். 3 நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்? 4 கோபத்தினால் உம்மைத்தானே பீறுகிற உமதுநிமித்தம் பூமி பாழாய்ப்போகுமோ? கன்மலை தன்னிடத்தை விட்டுப் பேருமோ? 5 துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோம். 6 அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோம். 7 அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம்; அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும். 8 அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான். 9 கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள். 10 அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது. 11 சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும். 12 அவன் பெலனைப் பட்டினி தின்றுபோடும்; அவன் பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும். 13 அது அவன் அங்கத்தின் பலத்தைப் பட்சிக்கும்; பயங்கரமான மரணமே அவன் அவயவங்களைப் பட்சிக்கும். 14 அவன் நம்பிக்கை அவன் கூடாரத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும். 15 அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும். 16 கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும். 17 அவனை நினைக்கும் நினைப்புப் பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும். 18 அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான். 19 அவன் ஜனத்துக்குள்ளே அவனுக்குப் புத்திரனும் இல்லை பௌத்திரனும் இல்லை; அவன் வீட்டில் மீதியாயிருக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை. 20 அவன் காலத்தோர் அவன் நாளுக்காகத் திடுக்கிட்டதுபோல, பின்னடியாரும் பிரமிப்பார்கள். 21 அக்கிரமக்காரன் குடியிருந்த ஸ்தானங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய ஸ்தலம் இதுவே என்பார்கள் என்றான்.
|
|
|