|
AND
find keywords in
Home Page
Genesis ஆதியாகமம் Exodus யாத்திராகமம் Leviticus லேவியராகமம் Numbers எண்ணாகமம் Deuteronomy உபாகமம் Joshua யோசுவா Judges நியாயாதிபதிகள் Ruth ரூத் 1 Samuel 1 சாமுவேல் 2 Samuel 2 சாமுவேல் 1 Kings 1 இராஜாக்கள் 2 Kings 2 இராஜாக்கள் 1 Chronicles 1 நாளாகமம் 2 Chronicles 2 நாளாகமம் Ezra எஸ்றா Nehemiah நெகேமியா Esther எஸ்தர் Job யோபு Psalms சங்கீதம் Proverbs நீதிமொழிகள் Ecclesiastes பிரசங்கி Song of Solomon உன்னதப்பாட்டு Isaiah ஏசாயா Jeremiah எரேமியா Lamentations புலம்பல் Ezekiel எசேக்கியேல் Daniel தானியேல் Hosea ஓசியா Joel யோவேல் Amos ஆமோஸ் Obadiah ஒபதியா Jonah யோனா Micah மீகா Nahum நாகூம் Habakkuk ஆபகூக் Zephaniah செப்பனியா Haggai ஆகாய் Zechariah சகரியா Malachi மல்கியா Matthew மத்தேயு Mark மாற்கு Luke லூக்கா John யோவான் Acts அப்போஸ்தலருடைய நடபடிகள் Romans ரோமர் 1 Corinthians 1 கொரிந்தியர் 2 Corinthians 2 கொரிந்தியர் Galatians கலாத்தியர் Ephesians எபேசியர் Philippians பிலிப்பியர் Colossians கொலோசெயர் 1 Thessalonians 1 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 2 தெசலோனிக்கேயர் 1 Timothy 1 தீமோத்தேயு 2 Timothy 2 தீமோத்தேயு Titus தீத்து Philemon பிலேமோன் Hebrews எபிரெயர் James யாக்கோபு 1 Peter 1 பேதுரு 2 Peter 2 பேதுரு 1 John 1 யோவான் 2 John 2 யோவான் 3 John 3 யோவான் Jude யூதா Revelation வெளிப்படுத்தின விசேஷம்
|
|
|
நீதிமொழிகள் Chapter10 1 சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான். 2 அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும். 3 கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். 4 சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். 5 கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன். 6 நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 7 நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும். 8 இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான். 9 உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். 10 கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான். 11 நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 12 பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும். 13 புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. 14 ஞானவான்கள் அறிவைச் சேர்த்து வைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது. 15 ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும். 16 நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும். 17 புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். 18 பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன். 19 சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். 20 நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது. 21 நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள். 22 கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். 23 தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு. 24 துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். 25 சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன். 26 பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான். 27 கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம். 28 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும். 29 கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம். 30 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை. 31 நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம். 32 நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.
|
|
|